search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்டு
    X
    சென்னை ஐகோர்ட்டு

    பாடப்புத்தகத்தில் உள்ள ஆர்எஸ்எஸ் குறித்த வரலாற்று தகவலை ஏன் நீக்க வேண்டும்?- அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி

    பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ். குறித்த வரலாற்று தகவலை ஏன் நீக்க வேண்டும்? என்று தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

    சென்னை:

    பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் ‘இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை ‘இந்து மகா சபா’ மற்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கங்கள் எடுத்ததாக வரலாற்று தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

    பாட புத்தகத்தில் இருந்து இந்த வாசகங்களை நீக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி சந்திரசேகரன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கு கடந்த மாதம் தனி நீதிபதி ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்த போது, மேற்கொண்டு அச்சடிக்கப்படும் புத்தகங்களில் இந்த வாசகங்கள் நீக்கப்படும் எனவும் தற்போது அச்சடிக் கப்பட்டுள்ள புத்தகங்களில் இந்த வாசகங்கள் மறைக் கப்படும் என விளக்கமளித்த தமிழக அரசு, இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட சுற்ற றிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

    இந்த சுற்றறிக்கையை ரத்து செய்யக்கோரியும் ஆர்.எஸ்.எஸ் குறித்த அந்த வரலாற்று வாசகங்களை பாட புத்தகத்தில் இருந்து நீக்க தடை கோரியும் தந்தை பெரியார் திராவிட கழக துணை தலைவர் துரைச்சாமி சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சத்தியநா ராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஆர்.எஸ்.எஸ் இயக்க தலைவர்களான நாதுராம் கோட்சே, சாவர்க்கர், கோல்வார்கர் போன்றவர்கள் இஸ்லாமி யர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர்கள் என்பது வரலாறு என்ற நிலையில், ஆர்.எஸ்.எஸ் குறித்து பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள வாசகங்களை நீக்க கூடாது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

    இதனை கேட்ட நீதிபதிகள், ஹிட்லரின் வாழ்க்கை வரலாறு, தற்போது நம்முடன் நட்புறவு கொண்டுள்ள சீனா இந்தியாவுக்கு எதிராக போர் தொடுத்தது போன்ற வரலாற்றை எப்படி மறைக்க முடியாதோ, அதேபோல தான் இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை ஆர்.எஸ்.எஸ். எடுத்ததையும் மறைக்க முடியாது என கருத்து தெரிவித்தனர்.

    மேலும், இதுபோன்ற வரலாறுகளை பாட புத்தகங்களில் இருந்து நீக்க என்ன நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது? எதற்காக அந்த கருத்தை நீக்க வேண்டும்? என்பது தொடர்பாக மார்ச் 19-ந்தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    Next Story
    ×