search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    சுவாமிமலை அருகே கோஷ்டி மோதலில் 4 பேர் கைது

    சுவாமிமலை அருகே ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடர்பாக 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சுவாமிமலை:

    சுவாமிமலை அருகே உள்ள சுந்தர பெருமாள் கோவில் ஆற்றங்கரை தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி சாவித்திரி (வயது53) அதே தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சந்திரசேகர் (65 ). இருவருக்குமிடையே ஏற்பட்ட வாய்த்தகராறில் சந்திரசேகர், அவரது மகன் சந்தோஷ் மற்றும் உறவினர் விஜய் ஆகிய 3 பேரும் சேர்ந்து சாவித்திரியை தாக்கினர்.

    இதில் பலத்த காயம் அடைந்த சாவித்திரி சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவத்தில் சாவித்திரியின் உறவினர்கள் ஆனந்த் மற்றும் மகேஷ் இருவரும் சேர்ந்து சுப்பிரமணியன் மகன் சந்திரசேகரை (65) தாக்கியதில் படுகாயம் அடைந்த சந்திரசேகர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த மோதலில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சாவித்திரி மற்றும் சந்திரசேகர் ஆகிய இருவரும் சுவாமிமலை போலீஸ் நிலையத்தில் தனித்தனியே அளித்த புகாரின்பேரில் சாவித்திரியை தாக்கிய சந்திரசேகரின் மகன் சந்தோஷ் (36), மற்றும் உறவினர் விஜய்(26), சாவித்திரியின் உறவினர்கள் ஆனந்த் (24), மற்றும் மகேஷ் (40), ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    Next Story
    ×