search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    தூத்துக்குடியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

    தூத்துக்குடியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
    தூத்துக்குடி: 

    தூத்துக்குடி தெர்மல்நகர் முத்துநகரை சேர்ந்தவர் பால்சாமி (வயது 30). இவருடைய மனைவி செல்லம்மாள் (27). இவர்களுக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஒரு பெண் குழந்தை உள்ளது. 

    இந்த நிலையில் நேற்று முன்தினம் குழந்தைக்கு மொட்டை போடுவதற்காக பருத்திகுளத்தில் உள்ள கோவிலுக்கு செல்ல முடிவு செய்யப்பட்டது. ஆனால் செல்லம்மாள் கோவிலுக்கு வரவில்லை என்று கூறிவிட்டாராம். இதனால் பால்சாமி தனது குழந்தை மற்றும் தனது குடும்பத்தை சேர்ந்தவர்களுடன் கோவிலுக்கு சென்று விட்டார். இதில் செல்லம்மாள் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் செல்லம்மாள் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து உடனடியாக தெர்மல்நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தெர்மல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத்சிங் கலோன் விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×