என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கருங்கல் அருகே ஒரு கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது
Byமாலை மலர்11 Feb 2020 10:59 AM GMT (Updated: 11 Feb 2020 10:59 AM GMT)
கருங்கல் அருகே ஒரு கிலோ கஞ்சாவுடன் சிக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருங்கல்:
கருங்கல் சப்-இன்ஸ்பெக்டர் மோகன அய்யர் மற்றும் போலீசார் ரோந்து சென்றபோது சூசைபுரம் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் போலீசார் அவரை சோதனை செய்தனர். சோதனையின் போது அவரிடம் ஒரு கிலோ 100 கிராம் எடை உள்ள கஞ்சா இருப்பது தெரிய வந்தது. உடனே அவரை போலீசார் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
மேலும் அவர் பாலப்பள்ளம் வெள்ளியாவிளை பகுதியைச் சேர்ந்த நேசமணி மகன் செல்வகுமார் (வயது 34) என்பதும், இவர் அந்த பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் இருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்து இரணியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இரணியல் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வாலிபர் செல்வகுமாரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
உத்தரவின் பேரில் போலீசார் அவரை நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர். மேலும் இது குறித்து கருங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருங்கல் சப்-இன்ஸ்பெக்டர் மோகன அய்யர் மற்றும் போலீசார் ரோந்து சென்றபோது சூசைபுரம் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் போலீசார் அவரை சோதனை செய்தனர். சோதனையின் போது அவரிடம் ஒரு கிலோ 100 கிராம் எடை உள்ள கஞ்சா இருப்பது தெரிய வந்தது. உடனே அவரை போலீசார் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
மேலும் அவர் பாலப்பள்ளம் வெள்ளியாவிளை பகுதியைச் சேர்ந்த நேசமணி மகன் செல்வகுமார் (வயது 34) என்பதும், இவர் அந்த பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் இருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்து இரணியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இரணியல் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வாலிபர் செல்வகுமாரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
உத்தரவின் பேரில் போலீசார் அவரை நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர். மேலும் இது குறித்து கருங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X