என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
களக்காட்டில் குழந்தைகள் ஆபாச படத்தை பதிவிறக்கம் செய்த வியாபாரி கைது
Byமாலை மலர்11 Feb 2020 4:03 AM GMT (Updated: 11 Feb 2020 4:03 AM GMT)
களக்காட்டில் குழந்தைகள் ஆபாச படத்தை பதிவிறக்கம் செய்த வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
களக்காடு:
தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்கு ஆபாச படங்களை பார்ப்பதும் ஒரு காரணம் என தெரியவந்துள்ளது. எனவே தமிழகத்தில் குழந்தைகள் ஆபாச படங்களை பார்ப்பவர்கள், அதனை பதிவிறக்கம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கு போலீசில் தொழில் நுட்ப பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. அவர்கள் இத்தகைய ஆபாச படங்களை செல்போன்களில் பார்ப்பவர்களை கண்டறிந்து அந்தந்த போலீஸ் நிலையங்களுக்கு தகவல் கொடுத்து வருகின்றனர்.
இதனடிப்படையில் நெல்லை மாவட்டம் களக்காட்டிலும் பலர் குழந்தைகள் ஆபாச வீடியோக்கள் மற்றும் படங்களை பார்ப்பது தெரிய வந்துள்ளது.
களக்காடு சிங்கம்பத்தை சேர்ந்தவர் ஜவகர் அலி (வயது 63). இவர் களக்காடு-சேரன்மகாதேவி சாலையில் இரு சக்கர வாகனங்களுக்கு சீட் தைத்து கொடுக்கும் கடை வைத்துள்ளார்.
இவர் தனது செல்போனில் 18 வயதிற்குள்பட்ட பெண் குழந்தைகளின் ஆபாச படங்களை பார்த்து வந்துள்ளார். மேலும் அதனை பதிவிறக்கம் செய்து பலருக்கும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்துள்ளார்.
இதனை கண்டுபிடித்த தொழில் நுட்ப பிரிவினர் இது குறித்து களக்காடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து களக்காடு இன்ஸ்பெக்டர் மேரிஜமிதா மற்றும் போலீசார் ஜவகர் அலியை கைது செய்தனர்.
களக்காடு பகுதியில் ஆபாச படங்கள் பார்ப்பவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்கு ஆபாச படங்களை பார்ப்பதும் ஒரு காரணம் என தெரியவந்துள்ளது. எனவே தமிழகத்தில் குழந்தைகள் ஆபாச படங்களை பார்ப்பவர்கள், அதனை பதிவிறக்கம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கு போலீசில் தொழில் நுட்ப பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. அவர்கள் இத்தகைய ஆபாச படங்களை செல்போன்களில் பார்ப்பவர்களை கண்டறிந்து அந்தந்த போலீஸ் நிலையங்களுக்கு தகவல் கொடுத்து வருகின்றனர்.
இதனடிப்படையில் நெல்லை மாவட்டம் களக்காட்டிலும் பலர் குழந்தைகள் ஆபாச வீடியோக்கள் மற்றும் படங்களை பார்ப்பது தெரிய வந்துள்ளது.
களக்காடு சிங்கம்பத்தை சேர்ந்தவர் ஜவகர் அலி (வயது 63). இவர் களக்காடு-சேரன்மகாதேவி சாலையில் இரு சக்கர வாகனங்களுக்கு சீட் தைத்து கொடுக்கும் கடை வைத்துள்ளார்.
இவர் தனது செல்போனில் 18 வயதிற்குள்பட்ட பெண் குழந்தைகளின் ஆபாச படங்களை பார்த்து வந்துள்ளார். மேலும் அதனை பதிவிறக்கம் செய்து பலருக்கும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்துள்ளார்.
இதனை கண்டுபிடித்த தொழில் நுட்ப பிரிவினர் இது குறித்து களக்காடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து களக்காடு இன்ஸ்பெக்டர் மேரிஜமிதா மற்றும் போலீசார் ஜவகர் அலியை கைது செய்தனர்.
களக்காடு பகுதியில் ஆபாச படங்கள் பார்ப்பவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X