search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    வேடசந்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை

    வேடசந்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கோகுல் நகரில் வசித்து வருபவர் முகமது ரபீக். வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி இறந்து விட்டதால் 40-ம் நாள் காரியத்திற்காக சித்தையன்கோட்டைக்கு தனது குடும்பத்துடன் சென்று விட்டார். இவர் வீட்டை பூட்டி சென்ற நிலையில் மர்ம நபர்கள் நோட்டமிட்டு தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். ஆள் இல்லாததை அறிந்து வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பீரோவில் இருந்த 9 பவுன் தங்கநகை, ரூ.12 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர்.

    வீடு திரும்பிய முகமதுரபீக் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததையும் பீரோவில் இருந்த நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததையும் அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

    அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு  கேமிராக்களில் கொள்ளையர்களின் உருவம் ஏதேனும் பதிவாகி உள்ளதா? என சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    Next Story
    ×