search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கோவை அருகே குடிபோதையில் பள்ளி வாகனம் ஓட்டிய டிரைவர் கைது

    கோவை குனியமுத்தூரில் இன்று காலை குடிபோதையில் தனியார் பள்ளி வாகனத்தை ஓட்டிய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    கோவை:

    கோவை மதுக்கரை பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களை அழைத்துவர தனியார் வாகன உரிமையாளர்களிடம் ஒப்பந்த அடிப்படையில் வாகனங்களை இயக்கிவருகிறார்கள்.

    இந்த நிலையில் கோவை விஜயலட்சுமி மில்ஸ், நரசிம்மபுரம் பகுதியில் இருந்து இன்று காலை மாணவர்களை அழைத்துச்செல்ல முருகேசன் என்பவர் பள்ளி வாகனம் ஓட்டி வந்தார். குடிபோதையில் இருந்த அவர் வாகனத்தை ஓட்டியதால் ரோட்டில் சென்ற மற்ற வாகனங்கள் மீது மோதுவது போல் அங்குமிங்கும் பள்ளி வாகனம் சென்றது. அப்போது அந்த பகுதியில் ஒரு வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தின் மீது பள்ளி வாகனம் மோதி நின்றது.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் டிரைவர் முருகேசனை மடக்கி பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து குடிபோதையில் பள்ளி வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் முருகேசனை கைது செய்து அழைத்து சென்றனர்.
    Next Story
    ×