search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கோவையில் தூக்குப்போட்டு நர்சு தற்கொலை

    கோவை பீளமேடு அருகே தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்த வந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை பீளமேடு அருகே உள்ள விளாங்குறிச்சி ரோட்டை சேர்ந்தவர் சத்யமூர்த்தி. இவரது மகள் ஹரினி (வயது 23). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த இவர் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட ஹரினியின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரினி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    செல்வபுரம் தெற்கு வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் குமரவேல். இவரது மனைவி கலைச்செல்வி (46). இவர் கடந்த சில மாதங்களாக மூச்சு திணறல் காரணமாக அவதிப்பட்டு வந்தார்.

    இதற்காக அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் உடல் நிலை சரியாகவில்லை. இதன்காரணமாக கலைச்செல்வி கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து வி‌ஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து செல்வபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட கலைச்செல்வியின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×