என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற தம்பதியை தாக்கி நகை பறிப்பு
Byமாலை மலர்10 Feb 2020 8:25 AM GMT (Updated: 10 Feb 2020 8:25 AM GMT)
திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற தம்பதியை தாக்கி நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை வேங்கிகால் பொன்னுசாமி நகரை சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மனைவி அருணா (வயது48). கணவன் மனைவி இருவரும் நேற்று முன்தினம் பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் சென்றனர். கிரிவலம் முடித்துவிட்டு நள்ளிரவு 2 மணியளவில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.
அவர்கள் செல்வா நகர் செல்லும் வழியில் வந்தபோது எதிரே பைக்கில் வந்த மர்ம நபர்கள்2 பேர் திடீரென வழிமறித்தனர். அவர்கள் அருணா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் செயினை பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பதியர் கத்தி கூச்சலிட்டனர்.
ஆனால் மர்மநபர்கள் மணிவண்ணனையும் அருணாவையும் கீழே தள்ளி விட்டு தப்பி சென்று விட்டனர். இதில் காயமடைந்த இருவரையும் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மீட்டு திருவண்ணாமலை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தப்பி சென்ற 2 கொள்ளையர்களையும் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை வேங்கிகால் பொன்னுசாமி நகரை சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மனைவி அருணா (வயது48). கணவன் மனைவி இருவரும் நேற்று முன்தினம் பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் சென்றனர். கிரிவலம் முடித்துவிட்டு நள்ளிரவு 2 மணியளவில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.
அவர்கள் செல்வா நகர் செல்லும் வழியில் வந்தபோது எதிரே பைக்கில் வந்த மர்ம நபர்கள்2 பேர் திடீரென வழிமறித்தனர். அவர்கள் அருணா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் செயினை பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பதியர் கத்தி கூச்சலிட்டனர்.
ஆனால் மர்மநபர்கள் மணிவண்ணனையும் அருணாவையும் கீழே தள்ளி விட்டு தப்பி சென்று விட்டனர். இதில் காயமடைந்த இருவரையும் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மீட்டு திருவண்ணாமலை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தப்பி சென்ற 2 கொள்ளையர்களையும் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X