search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    தூத்துக்குடியில் வி‌ஷம் குடித்து இளம்பெண் தற்கொலை

    தூத்துக்குடி அருகே குடும்ப பிரச்சினையில் இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அருகே உள்ள சுனாமி காலனி சிலுவைபட்டியை சேர்ந்தவர் செலின்ராஜ். இவரது மனைவி ஜாஸ்மின் (வயது 22). இவர்கள் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் மனமுடைந்த ஜாஸ்மின் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வி‌ஷத்தை குடித்து மயங்கிய நிலையில் இருந்தார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் ஜாஸ்மின் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×