search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    திருக்கனூர் அரசு ஆஸ்பத்திரி பெண் டாக்டர் மர்ம மரணம்

    திருக்கனூர் அரசு ஆஸ்பத்திரி பெண் டாக்டர் மர்மமான முறையில் இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை திருக்கனூர் அருகே உள்ள கூனிச்சம்பட்டை சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மகள் ஜெயஸ்ரீ (வயது 25).

    எம்.பி.பி.எஸ். டாக்டர் படிப்பு படித்துள்ள அவர் திருக்கனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக டாக்டராக பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 27-ந் தேதி வீட்டில் இருந்த அவர் வாந்தி எடுத்து வயிற்று வலியால் துடித்தார்.

    உடனே அவரை மதகடிப்பட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். உடல்நிலை மோசம் அடைந்ததையடுத்து சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால், சிகிச்சை பலனின்றி ஜெயஸ்ரீ உயிர் இழந்தார். அவர் வயிற்றில் பாஸ்பரஸ் டாக்சிசிட்டி என்ற வி‌ஷம் இருந்ததாக சிகிச்சை அளித்த தனியார் ஆஸ்பத்திரி கூறி உள்ளது.

    ஜெயஸ்ரீ அவராக வி‌ஷம் குடித்தாரா? அல்லது வேறு ஏதேனும் வகையில் வயிற்றில் வி‌ஷம் கலந்ததா? என்பது மர்மமாக உள்ளது.

    இதுபற்றி திருக்கனூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×