search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமாவளவன்
    X
    திருமாவளவன்

    குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து திருச்சியில் 22-ந்தேதி பேரணி- திருமாவளவன் பேட்டி

    தேசிய குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து வருகிற 22-ந்தேதி திருச்சியில் பேரணி நடத்தப்படும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முரம்பு கிராமத்தில் தேவனேய பாவானரின் சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மாலை அணிவித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது,

    தேவனேய பாவானரின் வாழ்க்கை வரலாற்றை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். அவரது கருத்துக்களை மாநிலம் முழுவதும் பரப்ப வேண்டும்.

    தேசிய குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து வருகிற 22-ந்தேதி திருச்சியில் பேரணி நடைபெறும். டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு குறித்து விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும். இதில் தொடர்புடையவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×