search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    காவேரிப்பட்டணம் அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- வாலிபர் கைது

    காவேரிப்பட்டணம் அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள குட்டிகவுண்டனூர் கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி, அங்குள்ள மாந்தோப்பிற்கு காலை கடனை கழிக்க சென்றுள்ளார்.

    அப்போது அதேபகுதியை சேர்ந்த முரளி (வயது 25) என்ற வாலிபர், அங்குசென்று அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து அந்த சிறுமியின் தந்தை, முரளியிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த முரளி, ஆபாச வார்த்தையால் திட்டியதுடன், சிறுமியின் தந்தையை அடிக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் முரளிக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இது குறித்து அந்த சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில், காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலம், முரளி மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிவுசெய்து கைது செய்தார். தற்போது முரளி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
    Next Story
    ×