search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    காவேரிப்பட்டணம் அருகே கார் விபத்தில் ஓய்வுபெற்ற தனியார் கம்பெனி மேலாளர் பலி

    காவேரிப்பட்டணம் அருகே கார் விபத்தில் பலத்த காயம் அடைந்த ஓய்வுபெற்ற தனியார் கம்பெனி மேலாளர் பலியானார்.
    கிருஷ்ணகிரி

    ஈரோடு மாவட்டம் கவுந்தபாடி பகுதியை சேர்ந்தவர் கலைவதணன் (வயது 65). இவர் பெல் கம்பெனியில் மேலாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். நேற்று தனது உறவினர்களுடன் காரில் தர்மபுரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். 

    அப்போது காவேரிப்பட்டணம் அருகே உள்ள நரிமேடு மேம்பாலத்தில், எவ்வித எச்சரிக்கை விளக்கும் எறியவிடாமல் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது, இவர்கள் சென்ற கார் மோதியதில், காரின் முன்சீட்டில் அமர்ந்திருந்த கலைவதணன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக பலியானார். 

    இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×