என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருப்பூரில் கஞ்சா விற்பனை செய்த 2 பெண்கள் குண்டர் சட்டத்தில் கைது
திருப்பூர்:
திருப்பூர் ஊத்துக்குளி ரோடு அணைக்காடு பிரிவு அருகே கடந்த டிசம்பர் மாதம் 31-ந் தேதி வடக்கு போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டபோது 2 மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி வந்த 2 பெண்கள் உள்பட 3 பேரை பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த மாயி(வயது 32), தேனி கீழ கூடலூரை சேர்ந்த தமிழ்செல்வி(43), திருச்சி செல்லூரை சேர்ந்த ரோஸ்லின்(22) என்பதும், இவர்கள் திருப்பூர் காங்கேயம் ரோடு புதுப்பாளையம் பிரிவு பகுதியில் குடியிருந்து கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து 51 கிலோ கஞ்சா, 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பேரையும் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.
இவர்கள் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய திருப்பூர் மாநகர போலீஸ் துணை கமிஷனர் பத்ரி நாராயணன் பரிந்துரையின் பேரில் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் உத்தரவிட்டார். அதன்படி இதற்கான உத்தரவு நகலை திருப்பூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், கோவை சிறையில் உள்ள மாயி, தமிழ்செல்வி, ரோஸ்லின் ஆகியோரிடம் வழங்கினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்