என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தைப்பூச திருவிழா: திண்டுக்கல்-பழனி சாலையில் போக்குவரத்து மாற்றம்
Byமாலை மலர்6 Feb 2020 10:34 AM GMT (Updated: 6 Feb 2020 10:34 AM GMT)
பழனித் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு இன்று முதல் வருகிற 9-ந் தேதி வரை திண்டுக்கல் பழனி சாலையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பாத யாத்திரையாக பழனிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பக்தர்களின் வசதிக்காகவும், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களை தவிர்க்கும் வகையிலும், இன்று முதல் 9-ந் தேதி வரையிலும் திண்டுக்கல் மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி தேனியில் இருந்து கோவை நோக்கி செல்லும் கனரக வாகனங்கள், செம்பட்டி வத்தலகுண்டு புறவழிச் சாலை, பழனி புறவழிச் சாலை தாடிக்கொம்பு, இடையக்கோட்டை சாலை, கள்ளிமந்தையம் தாராபுரம் வழியாக செல்ல வேண்டும்.
மதுரையிலிருந்து கோவை செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் கார்கள், காமலாபுரம் வத்தலகுண்டு புறவழிச்சாலை, பழனி புறவழிச்சாலை தாடிக்கொம்பு, இடையகோட்டை சாலை, கள்ளிமந்தையம், தாராபுரம் வழியாக செல்ல வேண்டும். கோவை, திருப்பூரில் இருந்து மதுரை செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் கார்கள் தாராபுரம் புறவழிச்சாலை, மூலனூர், சின்ன தாராபுரம், அரவக்குறிச்சி, கரூர் மதுரை 4 வழிச்சாலையில் செல்ல வேண்டும்.
தேனியிலிருந்து கோவை செல்லும் பேருந்துகள் செம்பட்டி, கன்னிவாடி, மூலசத்திரம், ஒட்டன்சத்திரம், கள்ளிமந்தையம், தொப்பம்பட்டி, பழனி வழியாக செல்ல வேண்டும். மதுரையிலிருந்து பழனி செல்லும் பேருந்துகள் திண்டுக்கல், பழனி புறவழிச் சாலை, ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம், கள்ளிமந்தையம், தொப்பம்பட்டி, புதிய தாராபுரம் சாலை வழியாக செல்ல வேண்டும்.
கோவையில் இருந்து வரும் பேருந்துகள் தாராபுரம் புறவழிச்சாலை, கள்ளிமந்தையம், ஒட்டன்சத்திரம், ரெட்டியார்சத்திரம், பழனி திண்டுக்கல் புறவழிச்சாலை வழியாக மதுரை மற்றும் திண்டுக்கல்லுக்குச் செல்ல வேண்டும். திண்டுக்கல்லில் இருந்து கோவை செல்லும் பேருந்துகள் அஞ்சலி ரவுண்டாணா, தாடிக் கொம்பு, இடையகோட்டை சாலை, கள்ளிமந்தையம், புதிய தாராபுரம் சாலை வழியாக செல்ல வேண்டும். மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய இடங்களிலிருந்து பழனி நோக்கி செல்லும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் அனைத்தும் ஒட்டன்சத்திரத்திலிருந்து அம்பிளிக்கை, கள்ளிமந்தயம், தொப்பம்பட்டி. புதிய தாராபுரம் சாலை வழியாக பழனிக்குச் செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பாத யாத்திரையாக பழனிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பக்தர்களின் வசதிக்காகவும், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களை தவிர்க்கும் வகையிலும், இன்று முதல் 9-ந் தேதி வரையிலும் திண்டுக்கல் மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி தேனியில் இருந்து கோவை நோக்கி செல்லும் கனரக வாகனங்கள், செம்பட்டி வத்தலகுண்டு புறவழிச் சாலை, பழனி புறவழிச் சாலை தாடிக்கொம்பு, இடையக்கோட்டை சாலை, கள்ளிமந்தையம் தாராபுரம் வழியாக செல்ல வேண்டும்.
மதுரையிலிருந்து கோவை செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் கார்கள், காமலாபுரம் வத்தலகுண்டு புறவழிச்சாலை, பழனி புறவழிச்சாலை தாடிக்கொம்பு, இடையகோட்டை சாலை, கள்ளிமந்தையம், தாராபுரம் வழியாக செல்ல வேண்டும். கோவை, திருப்பூரில் இருந்து மதுரை செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் கார்கள் தாராபுரம் புறவழிச்சாலை, மூலனூர், சின்ன தாராபுரம், அரவக்குறிச்சி, கரூர் மதுரை 4 வழிச்சாலையில் செல்ல வேண்டும்.
தேனியிலிருந்து கோவை செல்லும் பேருந்துகள் செம்பட்டி, கன்னிவாடி, மூலசத்திரம், ஒட்டன்சத்திரம், கள்ளிமந்தையம், தொப்பம்பட்டி, பழனி வழியாக செல்ல வேண்டும். மதுரையிலிருந்து பழனி செல்லும் பேருந்துகள் திண்டுக்கல், பழனி புறவழிச் சாலை, ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம், கள்ளிமந்தையம், தொப்பம்பட்டி, புதிய தாராபுரம் சாலை வழியாக செல்ல வேண்டும்.
கோவையில் இருந்து வரும் பேருந்துகள் தாராபுரம் புறவழிச்சாலை, கள்ளிமந்தையம், ஒட்டன்சத்திரம், ரெட்டியார்சத்திரம், பழனி திண்டுக்கல் புறவழிச்சாலை வழியாக மதுரை மற்றும் திண்டுக்கல்லுக்குச் செல்ல வேண்டும். திண்டுக்கல்லில் இருந்து கோவை செல்லும் பேருந்துகள் அஞ்சலி ரவுண்டாணா, தாடிக் கொம்பு, இடையகோட்டை சாலை, கள்ளிமந்தையம், புதிய தாராபுரம் சாலை வழியாக செல்ல வேண்டும். மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய இடங்களிலிருந்து பழனி நோக்கி செல்லும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் அனைத்தும் ஒட்டன்சத்திரத்திலிருந்து அம்பிளிக்கை, கள்ளிமந்தயம், தொப்பம்பட்டி. புதிய தாராபுரம் சாலை வழியாக பழனிக்குச் செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X