search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    போடி அருகே காரில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது

    போடி அருகே காரில் கஞ்சா கடத்திய 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
    மேலசொக்கநாதபுரம்:

    ஆந்திரா மாநிலத்தில் இருந்து தேனி மாவட்டம் மற்றும் கேரள பகுதிக்கு அதிக அளவு கஞ்சா கடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக போலீசார் ரோந்து பணியை தீவிரபடுத்தி கஞ்சா கடத்துபவர்களை கைது செய்து வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு குமுளி, கம்பம் பகுதியில் கஞ்சா விற்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் போடி அருகே டி.ரங்கநாதபுரம் பகுதியில் ஒரு கார் அதிவேகமாக சென்றது. இது குறித்து தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர் தர்மர் தலைமையில் போடி தாலுகா போலீசார் காரை விரட்டிச் சென்றனர்.

    சிலமலைப்பகுதியில் காரை மடக்கி பிடித்த போலீசார் அதில் இருந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் கம்பத்தைச் சேர்ந்த சரவணன் மற்றும் அமாவாசி என்பது தெரிய வந்தது. மேலும் அவர்கள் கஞ்சா விற்பனைக்கு கொண்டு சென்றதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து காரை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.

    பெரியகுளம் தென்கரை போலீசார் தண்டுபாளையம் வராக நதி ஆற்றங்கரையில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்ற அழகர், சந்தான கருப்பையா ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×