என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் மாற்றம்
Byமாலை மலர்6 Feb 2020 9:25 AM GMT (Updated: 6 Feb 2020 9:25 AM GMT)
வேலூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளராக இருந்த முத்தமிழ்செல்வி மாற்றப்பட்டு அந்த இடத்துக்கு தேவராஜி நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு தி.மு.க.வில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. தி.மு.க. முதன்மை செயலாளராக இருந்த டி.ஆர். பாலு மாற்றப்பட்டு, திருச்சி மாவட்ட செயலாளராக இருந்த கே.என்.நேரு நியமிக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து திருச்சி மாவட்டத்தை 3 ஆக பிரித்து அன்பில் மகேஷ் பொய்யாமொழியை புதிய மாவட்ட செயலாளராக நியமித்தனர். அதன்பிறகு கோவை மாநகர் மாவட்டத்தை பிரித்து ஒரு மாவட்டத்துக்கு முத்துசாமியை பொறுப்பாளராக நியமித்தனர்.
சேலம் மாவட்டத்தில் பொறுப்பாளராக இருந்த வீரபாண்டி ராஜாவை தேர்தல் பிரிவு செயலாளராக மாற்றி அவர் வகித்த பதவியை செல்வகணபதிக்கு கொடுத்தனர்.
இப்போது வேலூர் மாவட்டத்தில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அங்கு மாவட்ட பொறுப்பாளராக இருந்த முத்தமிழ்செல்வி மாற்றப்பட்டு அந்த இடத்துக்கு தேவராஜி நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
வேலூர் மேற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் முத்தமிழ் செல்வி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு வாணியம்பாடி, செக் மேட்டை சேர்ந்த தேவராஜி நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் நிர்வாகிகள் இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு தி.மு.க.வில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. தி.மு.க. முதன்மை செயலாளராக இருந்த டி.ஆர். பாலு மாற்றப்பட்டு, திருச்சி மாவட்ட செயலாளராக இருந்த கே.என்.நேரு நியமிக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து திருச்சி மாவட்டத்தை 3 ஆக பிரித்து அன்பில் மகேஷ் பொய்யாமொழியை புதிய மாவட்ட செயலாளராக நியமித்தனர். அதன்பிறகு கோவை மாநகர் மாவட்டத்தை பிரித்து ஒரு மாவட்டத்துக்கு முத்துசாமியை பொறுப்பாளராக நியமித்தனர்.
சேலம் மாவட்டத்தில் பொறுப்பாளராக இருந்த வீரபாண்டி ராஜாவை தேர்தல் பிரிவு செயலாளராக மாற்றி அவர் வகித்த பதவியை செல்வகணபதிக்கு கொடுத்தனர்.
இப்போது வேலூர் மாவட்டத்தில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அங்கு மாவட்ட பொறுப்பாளராக இருந்த முத்தமிழ்செல்வி மாற்றப்பட்டு அந்த இடத்துக்கு தேவராஜி நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
வேலூர் மேற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் முத்தமிழ் செல்வி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு வாணியம்பாடி, செக் மேட்டை சேர்ந்த தேவராஜி நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் நிர்வாகிகள் இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X