என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுவையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி
Byமாலை மலர்6 Feb 2020 9:08 AM GMT (Updated: 6 Feb 2020 9:08 AM GMT)
புதுவையில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள மேலும் ஒருவருக்கு தனி வார்டு அமைத்து மருத்துவ குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
புதுச்சேரி:
சீனாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நோய் சிங்கப்பூர் உள்ளிட்ட மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது.
இதற்கிடையே புதுவையை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சிங்கப்பூருக்கு சென்றுவிட்டு கடந்த 3 நாட்களுக்கு முன்பு புதுவை திரும்பினார்.
அப்போது அவருக்கு கொரோனா வைரஸ் நோய் அறிகுறியுடன் இருந்ததால் அவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் புதுவை கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது பெயர் விவரம் அறிவிக்கப்படவில்லை.
ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தனி வார்டு அமைத்து மருத்துவ குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
அவரது ரத்த மாதிரி எடுக்கப்பட்டு புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த ஆய்வு முடிவுகள் வந்த பிறகே அவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்பது தெரிய வரும். தொடர்ந்து அந்த நபருக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
சீனாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நோய் சிங்கப்பூர் உள்ளிட்ட மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது.
இதற்கிடையே புதுவையை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சிங்கப்பூருக்கு சென்றுவிட்டு கடந்த 3 நாட்களுக்கு முன்பு புதுவை திரும்பினார்.
அப்போது அவருக்கு கொரோனா வைரஸ் நோய் அறிகுறியுடன் இருந்ததால் அவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் புதுவை கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது பெயர் விவரம் அறிவிக்கப்படவில்லை.
ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தனி வார்டு அமைத்து மருத்துவ குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
அவரது ரத்த மாதிரி எடுக்கப்பட்டு புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த ஆய்வு முடிவுகள் வந்த பிறகே அவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்பது தெரிய வரும். தொடர்ந்து அந்த நபருக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X