search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஷம்
    X
    விஷம்

    குலசேகரத்தில் விருப்ப ஓய்வு பெற்ற தாசில்தார் தற்கொலை

    குலசேகரத்தில் இன்று விருப்ப ஓய்வு பெற்ற தாசில்தார் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவட்டார்:

    குலசேகரம் அரசமூடு பகுதியை சேர்ந்தவர் டேவிட் ராஜ் (வயது 57).

    டேவிட் ராஜ் வருவாய் துறையில் பணியாற்றி பதவி உயர்வு மூலம் தாசில்தார் ஆனவர். சமீபத்தில் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.

    அதன்பின்பு வீட்டில் இருந்தபடி விவசாய வேலைகளை செய்து வந்தார்.

    டேவிட் ராஜின் மனைவி ஆசிரியையாக உள்ளார். இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகன் சென்னையில் படித்து வருகிறார். மகள் பள்ளியில் படிக்கிறார்.

    டேவிட் ராஜிக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை தொடர்பாக வாக்குவாதம் ஏற்படும். அப்போது மனைவி, கணவரிடம் கோபித்து கொண்டு அருகில் உள்ள சகோதரர் வீட்டுக்கு சென்றுவிடுவார்.

    இதுபோல நேற்றும் வீட்டில் டேவிட் ராஜ் மட்டும் தனியாக இருந்தார். அவரது மனைவி மற்றும் மகள் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டனர்.

    இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் டேவிட் ராஜ் வீட்டு கதவு திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் இது பற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    குலசேகரம் போலீசார் விரைந்து வந்து கதவை திறந்து பார்த்தனர். அங்கு டேவிட் ராஜ் வாயில் நுரை தள்ளிய படி மயங்கி கிடந்தார். அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், டேவிட் ராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் டேவிட் ராஜ் தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது பற்றியும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×