என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒட்டப்பிடாரம் அருகே ஜே.சி.பி. எந்திரம் மோதி மாணவன் பலி
Byமாலை மலர்6 Feb 2020 8:13 AM GMT (Updated: 6 Feb 2020 8:13 AM GMT)
ஒட்டப்பிடாரம் அருகே ஜே.சி.பி. எந்திரம் மோதி பிளஸ்-2 மாணவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஒட்டப்பிடாரம்:
ஒட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூர் மேலமடம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் அதிபன் (வயது 17). இவன் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவனது நண்பர்களான குலசேகரநல்லூரை சேர்ந்த முத்து(17), கிருஷ்ணன் (17) ஆகியோரை மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு புதியம்புத்தூரில் இருந்து குலசேகரநல்லூருக்கு சென்றுள்ளான்.
அப்போது அவர்கள் ஒசனூத்து அருகே செல்லும்போது எதிரே வந்த ஜே.சி.பி. எந்திரத்தில் எதிர்பாராதவிதமாக மோதியுள்ளனர். இதில் ஜே.சி.பி. எந்திரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே அதிபன் பலியானான். மேலும் அவனது நண்பர்கள் 2 பேரும் பலத்த காயமடைந்தனர். இது குறித்து ஒட்டப்பிடாரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் விபத்தில் பலியான அதிபன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஒட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூர் மேலமடம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் அதிபன் (வயது 17). இவன் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவனது நண்பர்களான குலசேகரநல்லூரை சேர்ந்த முத்து(17), கிருஷ்ணன் (17) ஆகியோரை மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு புதியம்புத்தூரில் இருந்து குலசேகரநல்லூருக்கு சென்றுள்ளான்.
அப்போது அவர்கள் ஒசனூத்து அருகே செல்லும்போது எதிரே வந்த ஜே.சி.பி. எந்திரத்தில் எதிர்பாராதவிதமாக மோதியுள்ளனர். இதில் ஜே.சி.பி. எந்திரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே அதிபன் பலியானான். மேலும் அவனது நண்பர்கள் 2 பேரும் பலத்த காயமடைந்தனர். இது குறித்து ஒட்டப்பிடாரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் விபத்தில் பலியான அதிபன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X