என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செங்கல்சூளையில் கொத்தடிமையாக இருந்த சிறுவர்கள் உள்பட 42 பேர் மீட்பு
Byமாலை மலர்6 Feb 2020 6:48 AM GMT (Updated: 6 Feb 2020 6:48 AM GMT)
திருவள்ளூரை அடுத்த பூச்சிஅத்திப்பேடு கிராமத்தில் உள்ள செங்கல்சூளையில் கொத்தடிமையாக இருந்த சிறுவர்கள் உள்பட 42 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த பூச்சிஅத்திப்பேடு கிராமத்தில் உள்ள செங்கல் சூளையில் கொத்தடிமைகள் இருப்பதாக கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் வருவாய் கோட்டாட்சியர் வித்யா, ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் முருகநாதன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்கு விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த, 13 சிறுவர்கள் உட்பட 42 பேர் கொத்தடிமைகளாக வேலை பார்ப்பது தெரியவந்தது. அவர்களை மீட்டு, திருவள்ளூர் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர்.
பின்னர் அவர்களுக்கு கொத்தடிமை மீட்பு சான்று மற்றும் வாழ்வாதார நிதியாக தலா ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை கலெக்டர் மகேஸ்வரி வழங்கினார். நிகழ்ச்சியில் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் தமிழ்ச்செல்வன் உட்பட பலர் உடனிருந்தனர்.
மேலும் இதுகுறித்து வெங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொத்தடிமைகளாக வைத்திருந்த செங்கல்சூளை உரிமையாளரை தேடி வருகின்றனர்.
திருவள்ளூரை அடுத்த பூச்சிஅத்திப்பேடு கிராமத்தில் உள்ள செங்கல் சூளையில் கொத்தடிமைகள் இருப்பதாக கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் வருவாய் கோட்டாட்சியர் வித்யா, ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் முருகநாதன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்கு விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த, 13 சிறுவர்கள் உட்பட 42 பேர் கொத்தடிமைகளாக வேலை பார்ப்பது தெரியவந்தது. அவர்களை மீட்டு, திருவள்ளூர் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர்.
பின்னர் அவர்களுக்கு கொத்தடிமை மீட்பு சான்று மற்றும் வாழ்வாதார நிதியாக தலா ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை கலெக்டர் மகேஸ்வரி வழங்கினார். நிகழ்ச்சியில் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் தமிழ்ச்செல்வன் உட்பட பலர் உடனிருந்தனர்.
மேலும் இதுகுறித்து வெங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொத்தடிமைகளாக வைத்திருந்த செங்கல்சூளை உரிமையாளரை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X