என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கும்மிடிப்பூண்டி அருகே வேன் கவிழ்ந்து 14 பேர் படுகாயம்
Byமாலை மலர்6 Feb 2020 6:43 AM GMT (Updated: 6 Feb 2020 6:43 AM GMT)
கும்மிடிப்பூண்டி அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து ஆரம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் அருகே உள்ள குழிநாவல் கிராமத்தைச் சேர்ந்த 30 பேர் ஒரு வேனில் பொன்னேரி அருகே உள்ள கள்ளூர் கிராமத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்கு சென்றனர்.
பின்னர் இரவு அவர்கள் அதே வேனில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். வேனை டிரைவர் சுதாகர் என்பவர் ஓட்டினார்.
வேன் பூங்குளம் என்ற கிராமத்தின் அருகே இரவு 11 மணியளவில் வந்து கொண்டிருந்த போது கட்டுபாட்டை இழந்த வேன் சாலையோரம் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் வேனில் பயணம் செய்த நாகஜோதி , பாக்கியலட்சுமி , ஜோதி, ரேணுகா, பரிமளா, கண்ணகி, விஜயகுமாரி, அயலு, மலைமல்லி , காஞ்சனா மற்றும் ரூபா, கவுதம், முனுசாமி மற்றொரு முனுசாமி என மொத்தம் 14 பேர் படுகாயம் அடைந்தனர்.
காயம் அடைந்த அனைவரும் கிசிக்சைக்காக சென்னை ஸ்டான்லி மற்றும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
விபத்து நடந்ததும் வேன் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் அருகே உள்ள குழிநாவல் கிராமத்தைச் சேர்ந்த 30 பேர் ஒரு வேனில் பொன்னேரி அருகே உள்ள கள்ளூர் கிராமத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்கு சென்றனர்.
பின்னர் இரவு அவர்கள் அதே வேனில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். வேனை டிரைவர் சுதாகர் என்பவர் ஓட்டினார்.
வேன் பூங்குளம் என்ற கிராமத்தின் அருகே இரவு 11 மணியளவில் வந்து கொண்டிருந்த போது கட்டுபாட்டை இழந்த வேன் சாலையோரம் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் வேனில் பயணம் செய்த நாகஜோதி , பாக்கியலட்சுமி , ஜோதி, ரேணுகா, பரிமளா, கண்ணகி, விஜயகுமாரி, அயலு, மலைமல்லி , காஞ்சனா மற்றும் ரூபா, கவுதம், முனுசாமி மற்றொரு முனுசாமி என மொத்தம் 14 பேர் படுகாயம் அடைந்தனர்.
காயம் அடைந்த அனைவரும் கிசிக்சைக்காக சென்னை ஸ்டான்லி மற்றும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
விபத்து நடந்ததும் வேன் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X