search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்த காட்சி.
    X
    மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்த காட்சி.

    தருமபுரியில் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கும் முயற்சியை கண்டித்து மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    தருமபுரி:

    மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கும் முயற்சியை கண்டித்து சி.ஐ.டி.யு. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் தருமபுரி மின்திட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் லெனின் மகேந்திரன் தலைமை வகித்தார். பீகார் மாநில மின்சார வாரியத்தை தனியார் மயமாக்குவதும், பாட்னாவில் போராடிய மின்வாரிய தொழிலாளர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையை கண்டித்தும், மத்திய பட்ஜெட்டில் எல்.ஐ.சி. தனியார் மயமாக்கும் அறிவிப்பை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
    Next Story
    ×