என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோட்டார் சைக்கிள் மின் கம்பத்தில் மோதி 4 பேர் படுகாயம்
Byமாலை மலர்5 Feb 2020 9:47 AM GMT (Updated: 5 Feb 2020 9:47 AM GMT)
வெள்ளகோவில் அருகே மோட்டார் சைக்கிள் மின் கம்பத்தில் மோதிய விபத்தில் படுகாயமடைந்த 4 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வெள்ளகோவில்:
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த முத்தூர் அருகே உள்ள அஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி(வயது49).
இவர் கர்நாடகாவில் ஜே.சி.பி. எந்திர டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சச்சின்(6) என்ற மகனும், கனிகா(9) என்ற மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் தட்சிணாமூர்த்தி விடுமுறையில் வீட்டிற்கு வந்திருந்தார். சம்பவத்தன்று தட்சிணாமூர்த்தி தனது மகன், மகள் மற்றும் தன்னுடன் டிரைவராக வேலைபார்க்கும் ராஜேஷ் ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் முத்தூரில் நடக்கும் திருவிழாவுக்கு சென்றார்.
மோட்டார் சைக்கிள் கொடுமுடி- காங்கயம் ரோட்டில் மேட்டுக்கடை என்ற இடத்தில் சென்றபோது அந்த வழியாக நடந்து சென்ற மில் தொழிலாளியான நன்கோ சிங் மீது மோதியது. இதில் அவர் லேசான காயம் அடைந்தார்.
பின்னர் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி அந்த பகுதியில் இருந்த மின்கம்பத்தில் மோதி நின்றது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த 4 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினர்.
இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். தட்சிணாமூர்த்தி, கனிகா, சச்சின் ஆகியோர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியிலும், ராஜேஷ் கரூரில் உள்ள ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த முத்தூர் அருகே உள்ள அஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி(வயது49).
இவர் கர்நாடகாவில் ஜே.சி.பி. எந்திர டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சச்சின்(6) என்ற மகனும், கனிகா(9) என்ற மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் தட்சிணாமூர்த்தி விடுமுறையில் வீட்டிற்கு வந்திருந்தார். சம்பவத்தன்று தட்சிணாமூர்த்தி தனது மகன், மகள் மற்றும் தன்னுடன் டிரைவராக வேலைபார்க்கும் ராஜேஷ் ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் முத்தூரில் நடக்கும் திருவிழாவுக்கு சென்றார்.
மோட்டார் சைக்கிள் கொடுமுடி- காங்கயம் ரோட்டில் மேட்டுக்கடை என்ற இடத்தில் சென்றபோது அந்த வழியாக நடந்து சென்ற மில் தொழிலாளியான நன்கோ சிங் மீது மோதியது. இதில் அவர் லேசான காயம் அடைந்தார்.
பின்னர் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி அந்த பகுதியில் இருந்த மின்கம்பத்தில் மோதி நின்றது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த 4 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினர்.
இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். தட்சிணாமூர்த்தி, கனிகா, சச்சின் ஆகியோர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியிலும், ராஜேஷ் கரூரில் உள்ள ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X