search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாராயணசாமி
    X
    நாராயணசாமி

    சிங்கப்பூர் முதலீட்டாளர்களுடன் நாராயணசாமி ஆலோசனை

    புதுவை சட்டசபையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி சிங்கப்பூர் முதலீட்டாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
    புதுச்சேரி:

    புதுவையில் புதிய தொழிற்கொள்கை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இதில் பல வெளிநாட்டு தொழிலதிபர்கள் முதலீடு செய்ய முன்வந்தனர்.

    இதுதொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் ஷாஜகான், பிப்டிக் சேர்மன் சிவா எம்.எல்.ஏ. ஆகியோர் முதலீட்டாளர்களை சந்தித்து பேசி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நவம்பர் 6-ம் தேதி முதல்-அமைச்சர் தலைமையிலான குழு சிங்கப்பூர் சென்று 4 நாட்கள் முகாமிட்டு புதுவையில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தனர்.

    இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து பிரபல நிறுவனத்தை சேர்ந்த பிரதிநிதிகள் புதுவைக்கு வந்தனர். புதுவை சட்டசபையில் முதல்-அமைச்சர் நாராயணசாமியை அவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின்போது அமைச்சர் ஷாஜகான், சிவா எம்.எல்.ஏ., தொழில்துறை செயலர் ஸ்ரன், இயக்குனர் பிரியதர்ஷினி ஆகியோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×