என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெல்லித்தோப்பில் மூதாட்டி வீட்டில் ரூ.9 லட்சம் நகை-பணம் திருட்டு
Byமாலை மலர்5 Feb 2020 9:30 AM GMT (Updated: 5 Feb 2020 9:30 AM GMT)
நெல்லித்தோப்பில் மூதாட்டி வீட்டில் ரூ. 9 லட்சம் மதிப்புள்ள நகை- பணத்தை திருடி சென்ற கணவன்-மனைவியை போலீசார் தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி:
நெல்லித்தோப்பு மடத்து வீதியை சேர்ந்தவர் அல்போன்சா மூதாட்டி (வயது70). திருமணமாகாத இவர் தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவருக்கு துணையாக கடந்த 10 வருடங்களாக கார்த்தி என்பவர் இருந்து வருகிறார்.
இதற்கிடையே அல்போன்சாவின் நெருங்கிய தோழி மகளான ஜானி இவரது கணவர் விக்னேஷ்ராஜ் ஆகியோர் அல்போன்சா வீட்டிலேயே தங்கி அவருக்கு சிறு சிறு வேலைகளை செய்து வந்தனர். இதனால் 3 பேர் மீது அல்போன்சா நம்பிக்கை வைத்து வீட்டில் சுதந்திரமாக இருக்க அனுமதித்தார்.
இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஜானி மற்றும் இவரது கணவர் விக்னேஷ்ராஜ் ஆகியோரும் திடீரென மாயமானார்கள். அதன்பிறகு அவர்கள் அல்போன்சா வீட்டு வேலைக்கு வரவில்லை.
இதனால் அவர்கள் மீது சந்தேகம் அடைந்து வீட்டில் இருந்த பொருட்களை சரிபார்த்த போது 3 பவுன் நகை மற்றும் வீட்டு பத்திரம் ஆகியவற்றை காணவில்லை.
மேலும் அல்போன்சாவின் ஏ.டி.எம். கார்டில் இருந்து ரூ.8 லட்சத்து 30 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது. இந்த பொருட்களின் மதிப்பு ரூ.9 லட்சமாகும்.
இதையடுத்து வீட்டில் இருந்து வெளியேறிய 2 பேரின் செல்போன்களை தொடர்பு கொண்ட போது அவர்களது செல்போன்கள் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது. எனவே கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து நகை-பணம் மற்றும் வீட்டு பத்திரத்தை திருடி சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து அல்போன்சாவின் சகோதரர் சாலமன் (50) உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து நகை-பணத்தை திருடி சென்ற ஜானி மற்றும் அவரது கணவர் விக்னேஷ்ராஜ் ஆகிய 2 பேரையும் தேடிவருகிறார்கள்.
நெல்லித்தோப்பு மடத்து வீதியை சேர்ந்தவர் அல்போன்சா மூதாட்டி (வயது70). திருமணமாகாத இவர் தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவருக்கு துணையாக கடந்த 10 வருடங்களாக கார்த்தி என்பவர் இருந்து வருகிறார்.
இதற்கிடையே அல்போன்சாவின் நெருங்கிய தோழி மகளான ஜானி இவரது கணவர் விக்னேஷ்ராஜ் ஆகியோர் அல்போன்சா வீட்டிலேயே தங்கி அவருக்கு சிறு சிறு வேலைகளை செய்து வந்தனர். இதனால் 3 பேர் மீது அல்போன்சா நம்பிக்கை வைத்து வீட்டில் சுதந்திரமாக இருக்க அனுமதித்தார்.
இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஜானி மற்றும் இவரது கணவர் விக்னேஷ்ராஜ் ஆகியோரும் திடீரென மாயமானார்கள். அதன்பிறகு அவர்கள் அல்போன்சா வீட்டு வேலைக்கு வரவில்லை.
இதனால் அவர்கள் மீது சந்தேகம் அடைந்து வீட்டில் இருந்த பொருட்களை சரிபார்த்த போது 3 பவுன் நகை மற்றும் வீட்டு பத்திரம் ஆகியவற்றை காணவில்லை.
மேலும் அல்போன்சாவின் ஏ.டி.எம். கார்டில் இருந்து ரூ.8 லட்சத்து 30 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது. இந்த பொருட்களின் மதிப்பு ரூ.9 லட்சமாகும்.
இதையடுத்து வீட்டில் இருந்து வெளியேறிய 2 பேரின் செல்போன்களை தொடர்பு கொண்ட போது அவர்களது செல்போன்கள் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது. எனவே கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து நகை-பணம் மற்றும் வீட்டு பத்திரத்தை திருடி சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து அல்போன்சாவின் சகோதரர் சாலமன் (50) உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து நகை-பணத்தை திருடி சென்ற ஜானி மற்றும் அவரது கணவர் விக்னேஷ்ராஜ் ஆகிய 2 பேரையும் தேடிவருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X