search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    திருக்கனூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை

    திருக்கனூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    திருக்கனூர் அருகே மண்ணாடிப்பட்டு கிழக்கு வீதியை சேர்ந்தவர் விஜய ராகவன் (வயது 32). இவர் தனியார் நிறுவனத்தில் வேன் டிரைவராக வேலை செய்து வந்தார்.

    இவரது மனைவி புவனேஸ்வரி. இவரும் திருபுவனையில் உள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    வேலை காரணமாக விஜயராகவன் 2, 3 நாட்கள் வெளியூரில் தங்கி விட்டு பிறகு வீடு திரும்புவார். இதற்கிடையே விஜயராகவன் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக மருந்து- மாத்திரை சாப்பிட்டு வந்தார்.

    கடந்த 2-ந்தேதி விஜயராகவன் வேலைக்கு செல்வதாக மனைவியிடம் கூறி சென்றார். ஆனால், மறுநாள் அவர் வீடு திரும்பவில்லை. வேலை காரணமாக கணவர் வெளியூரில் இருக்கலாம் என கருதி நேற்று காலை வழக்கம் போல் புவனேஸ்வரி வேலைக்கு சென்றார். குழந்தைகளும் பள்ளிக்கு சென்று விட்டனர்.

    நேற்று மதியம் விஜயராகவனின் தந்தை வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் விஜயராகவன் தூக்கு போட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் விஜயராகவனை தூக்கில் இருந்து மீட்டு மண்ணாடிப்பட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே விஜயராகவன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    நோய் கொடுமை காரணமாக விஜயராகவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அவரது மனைவி புவனேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் திருக்கனூர் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் குப்புசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கிருமாம்பாக்கம் அருகே பிள்ளையார்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரபத்திரன் (55). கூலி தொழிலாளி. இவருக்கு சுமதி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது.

    கடந்த சில நாட்களாக வீரபத்திரன் சரியாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்தார்.

    சம்பவத்தன்றும் அவர் இதுபோல் வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதனை அவரது மனைவி சுமதி கண்டித்தார். இதனால் மனமுடைந்த வீரபத்திரன் வயலுக்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தை (வி‌ஷம்) குடித்து விட்டார்.

    இதில் மயங்கி விழுந்த வீரபத்திரனை அவரது குடும்பத்தினர் மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த வீரபத்திரன் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×