என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராஜாக்கமங்கலம் அருகே மரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி பலி
Byமாலை மலர்5 Feb 2020 9:02 AM GMT (Updated: 5 Feb 2020 9:02 AM GMT)
ராஜாக்கமங்கலம் அருகே கிளைகளை முறிப்பதற்காக மரத்தில் ஏறிய தொழிலாளி கால் தவறி கீழே விழுந்து பலியானார்.
ராஜாக்கமங்கலம்:
ராஜாக்கமங்கலம் அருகே உள்ள பழவிளை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் தயாகரன் (வயது 31).
இவருக்கு திருமணமாகி மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். தயாகரன் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று வழக்கம் போல அவர், வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அதன் பிறகு அங்குள்ள ஒரு மரத்தில் கிளைகளை முறிப்பதற்காக தயாகரன் ஏறினார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி தயாகரன் மரத்தில் இருந்து கீழே விழுந்து விட்டார்.
அவரது அலறல் சத்தம் கேட்டதும், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர்.ஆனால் மரத்தில் இருந்து கீழே விழுந்ததில் தயாகரன் இறந்து விட்டது தெரிய வந்தது.
இதுபற்றி ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் மீனா இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறார்.
ராஜாக்கமங்கலம் அருகே உள்ள பழவிளை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் தயாகரன் (வயது 31).
இவருக்கு திருமணமாகி மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். தயாகரன் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று வழக்கம் போல அவர், வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அதன் பிறகு அங்குள்ள ஒரு மரத்தில் கிளைகளை முறிப்பதற்காக தயாகரன் ஏறினார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி தயாகரன் மரத்தில் இருந்து கீழே விழுந்து விட்டார்.
அவரது அலறல் சத்தம் கேட்டதும், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர்.ஆனால் மரத்தில் இருந்து கீழே விழுந்ததில் தயாகரன் இறந்து விட்டது தெரிய வந்தது.
இதுபற்றி ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் மீனா இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X