என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இரணியல் அருகே ஓடும் பஸ்சில் பணம் திருட்டு- தொழிலாளி கைது
Byமாலை மலர்5 Feb 2020 8:47 AM GMT (Updated: 5 Feb 2020 8:47 AM GMT)
இரணியல் அருகே ஓடும் பஸ்சில் பணம் திருடப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட தொழிலாளியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:
தக்கலை பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன். இவர் நேற்று தக்கலையில் இருந்து நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
அரசு பஸ்சில் பயணம் செய்த ஐயப்பன் அமர்ந்திருந்து இருக்கைக்கு அருகில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் அமர்ந்திருந்தார்.
பஸ் நாகர்கோவில் வந்ததும், ஐயப்பன் பஸ்சில் இருந்து கீழே இறங்கினார். அப்போது அவர் கைப்பையில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் பணம் மாயமாகி இருந்தது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஐயப்பன் இதுபற்றி உறவினர் ஒருவருக்கு தகவல் கொடுத்தார். பின்னர் அவர்கள் நாகர்கோவிலில் இருந்து ஐயப்பன் பயணம் செய்த பஸ்சை ஒரு ஆட்டோவில் பின்தொடர்ந்து சென்றனர்.
பஸ் பார்வதிபுரம் சென்றபோது ஐயப்பன் அருகில் இருந்த நபர் அங்கு இறங்கினார். உடனே அந்த நபரிடம் பணம் குறித்து கேட்டபோது அவர் தனக்கு எதுவும் தெரியாது என்றார்.
உடனே ஐயப்பன் இது பற்றி போலீசில் புகார் செய்ய போகிறேன் என்றதும் அந்த நபர், பணத்தை எடுத்து கொடுத்தார்.
இதையடுத்து ஐயப்பனும், அவரது உறவினரும் சேர்ந்து அந்த நபரை பிடித்தனர். பின்னர் அவர்கள் அவரை இரணியல் போலீசில் ஒப்படைத்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் ஞானசிகாமணி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் ஆகியோர் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் தெங்கம்புதூரை சேர்ந்த செல்வகுமார், தொழிலாளி என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தக்கலை பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன். இவர் நேற்று தக்கலையில் இருந்து நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
அரசு பஸ்சில் பயணம் செய்த ஐயப்பன் அமர்ந்திருந்து இருக்கைக்கு அருகில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் அமர்ந்திருந்தார்.
பஸ் நாகர்கோவில் வந்ததும், ஐயப்பன் பஸ்சில் இருந்து கீழே இறங்கினார். அப்போது அவர் கைப்பையில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் பணம் மாயமாகி இருந்தது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஐயப்பன் இதுபற்றி உறவினர் ஒருவருக்கு தகவல் கொடுத்தார். பின்னர் அவர்கள் நாகர்கோவிலில் இருந்து ஐயப்பன் பயணம் செய்த பஸ்சை ஒரு ஆட்டோவில் பின்தொடர்ந்து சென்றனர்.
பஸ் பார்வதிபுரம் சென்றபோது ஐயப்பன் அருகில் இருந்த நபர் அங்கு இறங்கினார். உடனே அந்த நபரிடம் பணம் குறித்து கேட்டபோது அவர் தனக்கு எதுவும் தெரியாது என்றார்.
உடனே ஐயப்பன் இது பற்றி போலீசில் புகார் செய்ய போகிறேன் என்றதும் அந்த நபர், பணத்தை எடுத்து கொடுத்தார்.
இதையடுத்து ஐயப்பனும், அவரது உறவினரும் சேர்ந்து அந்த நபரை பிடித்தனர். பின்னர் அவர்கள் அவரை இரணியல் போலீசில் ஒப்படைத்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் ஞானசிகாமணி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் ஆகியோர் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் தெங்கம்புதூரை சேர்ந்த செல்வகுமார், தொழிலாளி என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X