என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரஜினியின் பேச்சு சங்பரிவாரின் குரலாக உள்ளது- திருமாவளவன்
Byமாலை மலர்5 Feb 2020 8:34 AM GMT (Updated: 5 Feb 2020 8:34 AM GMT)
குடியுரிமை திருத்த சட்டம் குறித்த ரஜினியின் பேச்சு சங்பரிவாரின் குரலாக உள்ளது என்று திருமாவளவன் எம்.பி. குற்றச்சாட்டியுள்ளார்.
நெல்லை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழில் குடமுழுக்கு நடைபெற வேண்டும். 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு அரசு பொதுத்தேர்வு அறிவித்த உடன் அனைத்து கட்சி மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து அரசு அந்த முடிவை கைவிட்டு பொதுத்தேர்வை ரத்து செய்துள்ளது. இதற்காக தமிழக அரசை பாராட்டுகிறேன். தேசிய கல்வி கொள்கையில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று உள்ளது. எனவே தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தும் போதும் தமிழக அரசு இதேபோல் உறுதியாக இருக்க வேண்டும்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து அறவழியில் அமைதியான முறையில் போராட்டம் நடந்து வருகிறது. இந்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை பா.ஜ.க. அரசு அமல்படுத்த முடியாமலும், வாபஸ் பெற முடியாமலும் முட்டு சந்தில் போய் நிற்கிறது.
எந்த ஒரு எதிர்வினையையும் தங்களது போராட்டத்தால் முதன் முதலில் தெரிவிப்பவர்கள் மாணவர்கள். மாணவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்பது போல் அவர்களுக்கு அறிவுரை சொல்வது தேவையில்லாதது. சங்பரிவார் அமைப்புடன் இணைந்து செயல்படுவதை காட்டி கொள்ளவே ரஜினி திட்டமிட்டு பேசி வருகிறார். குடியுரிமை திருத்த சட்டம் குறித்த ரஜினியின் பேச்சு சங்பரிவாரின் குரலாக பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தஞ்சை பெரிய கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடைபெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ் அறிஞர்கள், பெரும்பாலான அரசியல் கட்சி தலைவர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. இந்த வெற்றி தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி.
எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழில் குடமுழுக்கு நடைபெற வேண்டும். 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு அரசு பொதுத்தேர்வு அறிவித்த உடன் அனைத்து கட்சி மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து அரசு அந்த முடிவை கைவிட்டு பொதுத்தேர்வை ரத்து செய்துள்ளது. இதற்காக தமிழக அரசை பாராட்டுகிறேன். தேசிய கல்வி கொள்கையில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று உள்ளது. எனவே தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தும் போதும் தமிழக அரசு இதேபோல் உறுதியாக இருக்க வேண்டும்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து அறவழியில் அமைதியான முறையில் போராட்டம் நடந்து வருகிறது. இந்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை பா.ஜ.க. அரசு அமல்படுத்த முடியாமலும், வாபஸ் பெற முடியாமலும் முட்டு சந்தில் போய் நிற்கிறது.
இதில் பின்வாங்க கூடாது என்று வீண் பிடிவாதம் செய்கிறார்கள். மக்கள் போராட்டம் அவர்களை பணிய வைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X