search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண் பலி
    X
    பெண் பலி

    கடையநல்லூர் அருகே பாம்பு கடித்து பெண் பலி

    கடையநல்லூர் அருகே பாம்பு கடித்து பெண் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நெல்லை:

    கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் தங்கமணி. இவரது மனைவி சரஸ்வதி(வயது 54). தங்கமணி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் சரஸ்வதி மட்டும் தனியாக வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் விவசாய தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று சரஸ்வதி அப்பகுதியில் உள்ள ஒருவரின் தோட்டத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அவரை பாம்பு கடித்துவிட்டது. உடனே தோட்டத்தில் இருந்தவர்கள் அவரை கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×