என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வில்லியனூர் அருகே பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்- 3 பேர் மீது வழக்கு
வில்லியனூர்:
வில்லியனூர் அருகே கூடப்பாக்கம் காலனியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி பிரியா (வயது 48).
இவர்களது குடும்பத்துக்கும், எதிர்வீட்டை சேர்ந்த மணிபாலன் (45) என்பவர் குடும்பத்துக்கும் ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் சம்பவத்தன்று பிரியா அப்பகுதியில் நடந்து வந்த போது மணிபாலன், இவரது மகன் தேவா (27) மற்றும் உறவினர் மஞ்சு (18) ஆகியோர் பிரியாவை வழிமறித்து கையாலும், கத்தியாலும் தாக்கினர். மேலும் கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து பிரியா வில்லியனூர் போலீசில் புகார் செய்தும் போலீசார் புகாரை ஏற்காததால் அதன் மீது நடவடிக்கை எடுக்க பிரியா புதுவை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வில்லியனூர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இதனையடுத்து வில்லியனூர் போலீஸ் சப்- இன்பெக்டர் நந்தகுமார், உதவி சப்-இன்ஸ்பெக்டர் தணிகாசலம் ஆகியோர் பிரியாவை தாக்கிய மணி பாலன், இவரது மகன் தேவா, உறவினர் மஞ்சு ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்