என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருவள்ளூர் அருகே மளிகை கடையை உடைத்து ரூ.40 ஆயிரம் கொள்ளை
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த பெரியகுப்பம் வள்ளலார் நகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
வழக்கம்போல் நேற்று இரவு கடையை மூடிவிட்டு சென்றார். இன்று அதிகாலை கடையை திறப்பதற்கு வந்த போது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது கடையில் வைத்திருந்த ரூ.40 ஆயிரம் ரொக்கம், ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள மளிகை பொருட்கள் கொள்ளை போய் இருந்தது.
இதுகுறித்து திருவள்ளூர் நகர போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
பொன்னேரியை அடுத்த பெருஞ்சேரியை சேர்ந்தவர் அஞ்சலி. இவர் பெரவல்லூர் அங்கன்வாடியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் வேலைக்கு செல்லும் போது வீட்டை பூட்டிவிட்டு சாவியை கதவு அருகே மறைத்து வைத்து சென்றார்.
மாலையில் திரும்பி வந்த போது பீரோவில் இருந்த 2 பவுன் நகை மாயமாகி இருந்தது. மறைத்துவைத் திருந்த சாவியை திருடி மர்ம நபர்கள் நகையை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்