என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவையில் 7-ம் வகுப்பு மாணவர் தற்கொலை
Byமாலை மலர்4 Feb 2020 4:57 AM GMT (Updated: 4 Feb 2020 4:57 AM GMT)
கோவை மாவட்டம் நெகமம் அருகே பெற்றோர் பள்ளிக்கு செல்லுமாறு கூறியதால் 7-ம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்துகொண்டார்.
கோவை:
கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள ஏ. நாகூரை சேர்ந்தவர் சுப்பிரமணி. விவசாய கூலி. இவரது மகன் பேச்சுமுத்து (வயது 13). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சுப்பிரமணி தனது குடும்பத்துடன் தைபூச திருவிழாவையொட்டி பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்றார். அவர்களுடன் பேச்சுமுத்தும் சென்றார்.
கடந்த 2-ந்தேதி அனைவரும் வீட்டுக்கு திரும்பினர். நேற்று காலையில் பேச்சுமுத்துவின் பெற்றோர் அவரை பள்ளிக்கு செல்லுமாறு கூறினர்.
ஆனால் அவர் தனக்கு சோர்வாக இருப்பதாகவும், இதன்காரணமாக பள்ளிக்கு செல்லவில்லை என்று கூறினார். ஆனால் அவரது பெற்றோர் பள்ளிக்கு செல்லவேண்டும் என்று கூறினர். இதனால் மனவேதனை அடைந்த பேச்சுமுத்து வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
இதனை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட பேச்சுமுத்துவின் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள ஏ. நாகூரை சேர்ந்தவர் சுப்பிரமணி. விவசாய கூலி. இவரது மகன் பேச்சுமுத்து (வயது 13). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சுப்பிரமணி தனது குடும்பத்துடன் தைபூச திருவிழாவையொட்டி பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்றார். அவர்களுடன் பேச்சுமுத்தும் சென்றார்.
கடந்த 2-ந்தேதி அனைவரும் வீட்டுக்கு திரும்பினர். நேற்று காலையில் பேச்சுமுத்துவின் பெற்றோர் அவரை பள்ளிக்கு செல்லுமாறு கூறினர்.
ஆனால் அவர் தனக்கு சோர்வாக இருப்பதாகவும், இதன்காரணமாக பள்ளிக்கு செல்லவில்லை என்று கூறினார். ஆனால் அவரது பெற்றோர் பள்ளிக்கு செல்லவேண்டும் என்று கூறினர். இதனால் மனவேதனை அடைந்த பேச்சுமுத்து வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
இதனை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட பேச்சுமுத்துவின் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X