search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

    விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் மெயின் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்.
    பென்னாகரம்:

    சுற்றுலா தலமான ஒகேனக்கல்லுக்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். அவர்கள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்வார்கள். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 500 கனஅடியாக குறைந்ததால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க தொடங்கியது.

    இந்தநிலையில் வாரவிடு முறையையொட்டி நேற்று ஒகேனக்கல்லில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு தடையை மீறி மெயின் அருவி மற்றும் காவிரி ஆற்றில் முதலை பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் அவர்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் பாதுகாப்பு உடை அணிந்து கோத்திக்கல் பரிசல் துறையில் இருந்து மணல் திட்டு வழியாக ஐந்தருவி வரை பாறைகளுக்கு இடையே பரிசலில் சென்றனர்.

    பின்னர் சுற்றுலா பயணிகள் மீன் அருங்காட்சியகம், முதலை பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் கடைகள், ஓட்டல்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. மேலும் மீன் மார்க்கெட் மற்றும் மீன் வறுவல் கடைகளில் விற்பனை படுஜோராக நடைபெற்றது.

    பஸ் நிலையம், மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் அலைமோதியது. இதனால் போலீசார் தீவிர ரோந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வெள்ளப்பெருக்கின் போது சேதமடைந்த மெயின் அருவி, நடைபாதை உள்ளிட்ட பகுதிகளை சீரமைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர். 
    Next Story
    ×