என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருவண்ணாமலை அருகே லாரி மீது பைக் மோதி கல்லூரி மாணவர் பலி
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா கண்ணகுருக்கை பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 21). இவரது நண்பர் திருவண்ணாமலை தாலுகா தண்டரை கிராமத்தைச் சேர்ந்த செல்வம் (20).இவர்கள் இருவரும் திருவண்ணாமலையில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தனர்.
இவர்கள் பைக்கில் நேற்று முன்தினம் இரவு நூக்காம் பாடி எம்.ஜி.ஆர். சிலை அருகே சென்றனர் .
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு லாரி மீது பைக் மோதியது. இதில் இருவரும் படுகாயமடைந்தனர்.
சம்பவ இடத்திலேயே உதயகுமார் பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த செல்வத்தை பொதுமக்கள் மீட்டு திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பலியான உதயகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்