search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக
    X
    திமுக

    ராஜேந்திரபாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கவர்னரிடம் திமுக புகார்

    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக மாவட்ட செயலாளர்கள் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து மனு கொடுத்தனர்.
    சென்னை:

    சென்னை தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ஜெ.அன்பழகன், ம.சுப்பிரமணியன் ஆகியோர் இன்று கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து மனு கொடுத்தனர்.

    பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மத சார்பின்மைக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. சார்பில் கவர்னரிடம் மனு கொடுத்துள்ளோம். அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும்.

    உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், சட்டப்பூர்வமாக கோர்ட்டை அணுகி நடவடிக்கை எடுப்போம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    Next Story
    ×