என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருத்தங்கல் அருகே, அட்டை மில்லில் பயங்கர தீ விபத்து
Byமாலை மலர்1 Feb 2020 4:44 PM GMT (Updated: 1 Feb 2020 4:44 PM GMT)
திருத்தங்கல் அருகே அட்டை மில்லில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் போராடி தீயை அணைத்தனர்.
திருத்தங்கல்:
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் அருகே உள்ள சுக்கிரவார்பட்டி - எம்.புதுப்பட்டி செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான அட்டை மில் உள்ளது.
இங்கு சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று சிவகாசி பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின் தடை செய்யப்பட்டு பராமரிப்பு பணிகளை மின்வாரிய பணியாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். இதையடுத்து மில்லில் ஜெனரேட்டர் இயக்கப்பட்டு ஊழியர்கள் அட்டை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.
பின்னர் மின்வாரிய பராமரிப்பு பணி முடிந்து மாலை 6 மணிக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. அப்போது மில் வளாக பகுதியில் மின்கசிவு ஏற்பட்டு திடீரென அங்கிருந்த அட்டைகளில் தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் தீ அந்த பகுதி முழுவதும் பரவி பற்றி எரியத்தொடங்கியது. அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமானது.
இதையடுத்து ஊழியர்கள் அனைவரும் மில்லில் இருந்து வெளியேற்றப்பட்டனர். தகவல் அறிந்து சிவகாசி, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட 6 இடங்களில் இருந்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். அதற்குள் அட்டைகள், கழிவுகள் முழுவதும் தீ பரவி பற்றி எரிந்தது. தீயை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி அணைத்தனர். தீ விபத்தில் எரிந்த பொருட்களின் சேத மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் என்று கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து திருத்தங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் அருகே உள்ள சுக்கிரவார்பட்டி - எம்.புதுப்பட்டி செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான அட்டை மில் உள்ளது.
இங்கு சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று சிவகாசி பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின் தடை செய்யப்பட்டு பராமரிப்பு பணிகளை மின்வாரிய பணியாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். இதையடுத்து மில்லில் ஜெனரேட்டர் இயக்கப்பட்டு ஊழியர்கள் அட்டை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.
பின்னர் மின்வாரிய பராமரிப்பு பணி முடிந்து மாலை 6 மணிக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. அப்போது மில் வளாக பகுதியில் மின்கசிவு ஏற்பட்டு திடீரென அங்கிருந்த அட்டைகளில் தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் தீ அந்த பகுதி முழுவதும் பரவி பற்றி எரியத்தொடங்கியது. அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமானது.
இதையடுத்து ஊழியர்கள் அனைவரும் மில்லில் இருந்து வெளியேற்றப்பட்டனர். தகவல் அறிந்து சிவகாசி, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட 6 இடங்களில் இருந்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். அதற்குள் அட்டைகள், கழிவுகள் முழுவதும் தீ பரவி பற்றி எரிந்தது. தீயை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி அணைத்தனர். தீ விபத்தில் எரிந்த பொருட்களின் சேத மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் என்று கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து திருத்தங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X