search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலைசெய்யப்பட்ட சக்திவேல்
    X
    கொலைசெய்யப்பட்ட சக்திவேல்

    வாலிபரை கழுத்தை இறுக்கி கொன்று நாடகமாடிய நண்பர் கைது

    மரக்காணம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை கழுத்தை இறுக்கி கொன்று நாடகமாடிய நண்பரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அழகர்பள்ளத்தெருவை சேர்ந்தவர் சக்திவேல்(வயது 39). வெல்டிங் தொழிலாளி. கரிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நாராயணன்(38). இவர்கள் இருவரும் நண்பர்கள். எங்கு சென்றாலும் வெல்டிங் வேலைக்கு ஒன்றாக செல்வார்கள்.

    கடந்த 30-ந் தேதி ஆலத்தூர் பகுதியில் கொட்டகை அமைக்க சென்றனர். இரவு அங்கேயே தங்கினார்கள். அப்போது ஏற்கனவே இவர்கள் 2 பேரும் புதுவையில் இருந்து மதுவாங்கி வந்திருந்தனர். இந்த மதுவை 2 பேரும் குடித்தனர்.

    அப்போது போதை தலைக்கு ஏறியதால் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த நாராயணன் நண்பன் என்று கூட பாராமல் அருகில் கிடந்த கயிற்றால் சக்திவேல் கழுத்தை பலமாக இறுக்கினார். இதில் அவர் சம்பவ இடத்தில் துடிதுடித்து இறந்தார்.

    இதனை அறிந்த நாராயணன் அதிர்ச்சியடைந்தார். உடனே சக்திவேலின் கழுத்தில் கயிறை கட்டி அங்குள்ள கம்பத்தில் தொங்க விட்டார். அதன் பின்னர் இரவோடு, இரவாக நாராயணன் தனது ஊரான கரிப்பாளையத்துக்கு வந்துவிட்டார்.

    மறுநாள் காலை கூடுதலாக நாராயணன் ஆட்களை அழைத்து கொண்டு ஆலத்தூருக்கு சென்றார். அப்போது சக்திவேல் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து நாராயணன் ஒன்றும் தெரியாதது போல் நாடகம் ஆடி கதறி அழுதார். பின்னர் வந்தவர்கள் ஆட்டோவை வரவழைத்து சக்திவேலை தூக்கிக்கொண்டு மரக்காணம் ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சக்திவேல் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    அதன்பின்னர் பிரேத பரிசோதனை நடந்தது. பிரேத பரிசோதனை முடிவில் சக்திவேல் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனை அறிந்ததும் நாராயணன் நைசாக அங்கிருந்து சென்று விட்டார்.

    இந்த விவரம் சக்திவேலின் மனைவி கவிதாவுக்கு தெரியவந்தது. அவர் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு வந்தார். தனது கணவனின் உடலை பார்த்து கதறிதுடித்தார்.

    இதுகுறித்து மரக்காணம் போலீசில் கவிதா புகார் செய்தார். புகார் மனுவில் எனது கணவர் சக்திவேல் அவரது நண்பரான நாராயணன் உடன் கடந்த 1 வாரத்துக்கு முன்பே சென்றுவிட்டார். எனவே அவர்தான் கொலை செய்திருப்பதாக சந்தேதிக்கிறேன் என்று தெரிவித்தார்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்விநாயகம், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் நாராயணனிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் சக்திவேலை அவர் கொலை செய்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் கொலை நடந்த இடமான ஆலத்தூருக்கு நாராயணனை அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×