search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    திருவாரூர் அருகே இளம்பெண் தற்கொலை

    திருவாரூர் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி காவல் சரகம் கூத்தனூரைச் சேர்ந்தவர் மல்லிகா (வயது 46). இவரது மகள் ரேணுகா(25). இவருக்கு அடிக்கடி வயிற்று வலி வருவதுண்டு. இந்நிலையில் இவருக்கு திருமண ஏற்பாடு நடை பெற்றுள்ளது. வயிற்று வலி அதிகமாக உள்ள நிலையில் திருமணம் செய்து வைக்க வேண்டாம் என ரேணுகா மறுத்துள்ளார். ஆனாலும் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

    இதனால் மனவேதனை அடைந்த ரேணுகா வீட்டில் யாரும் இல்லாதபோது எலி பேஸ்ட் மருந்து எடுத்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை அறிந்த உறவினர்கள் உடனடியாக இவரை தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது தொடர்பாக ரேணுகாவின் தாய் மல்லிகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜ கோபால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×