search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள்.
    X
    பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள்.

    பொன்னேரி அருகே முட்புதரில் பதுக்கிய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

    பொன்னேரி அருகே முட்புதரில் பதுக்கி வைத்திருந்த 2 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த அனுப்பம்பட்டு ரெயில் நிலையம் பின்புறம் உள்ள முட்புதரில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் பொன்னேரி வட்ட வழங்கல் அலுவலர் தனுஜா டயானாவுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் அதிகாரிகளுடன் விரைந்து வந்து ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தார். மொத்தம் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது. அதனை பதுக்கி வைத்தவர்கள் யார்? என்று தெரியவில்லை. அவர்களை பிடிக்க விசாரணை நடந்து வருகிறது.

    பொன்னேரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசியை வாங்கி ஆந்திராவுக்கு கடத்தப்படுவது சமீப காலமாக அதிகரித்துள்ளது. தற்போது பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி மூட்டைகளும் ஆந்திராவுக்கு கொண்டு செல்ல இருந்தவையாக இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.

    இந்த அரிசி எந்தெந்த ரேஷன் கடைகளில் வாங்கப்பட்டது என்பது குறித்தும் தனியாக விசாரணை நடக்கிறது.
    Next Story
    ×