என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொன்னேரி அருகே முட்புதரில் பதுக்கிய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
Byமாலை மலர்30 Jan 2020 11:40 AM GMT (Updated: 30 Jan 2020 11:40 AM GMT)
பொன்னேரி அருகே முட்புதரில் பதுக்கி வைத்திருந்த 2 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த அனுப்பம்பட்டு ரெயில் நிலையம் பின்புறம் உள்ள முட்புதரில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் பொன்னேரி வட்ட வழங்கல் அலுவலர் தனுஜா டயானாவுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் அதிகாரிகளுடன் விரைந்து வந்து ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தார். மொத்தம் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது. அதனை பதுக்கி வைத்தவர்கள் யார்? என்று தெரியவில்லை. அவர்களை பிடிக்க விசாரணை நடந்து வருகிறது.
பொன்னேரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசியை வாங்கி ஆந்திராவுக்கு கடத்தப்படுவது சமீப காலமாக அதிகரித்துள்ளது. தற்போது பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி மூட்டைகளும் ஆந்திராவுக்கு கொண்டு செல்ல இருந்தவையாக இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.
இந்த அரிசி எந்தெந்த ரேஷன் கடைகளில் வாங்கப்பட்டது என்பது குறித்தும் தனியாக விசாரணை நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X