என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கரூர் அருகே பள்ளி ஆசிரியை தற்கொலை
Byமாலை மலர்29 Jan 2020 6:02 PM GMT (Updated: 29 Jan 2020 6:02 PM GMT)
கரூர் அருகே தனியார் பள்ளி ஆசிரியை அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கரூர்:
கரூர் அருகே உள்ள சிவியம்பாளையத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 52). இவரது மகள் லோகாம்பாள் (24). இவர், திருக்காம்புலியூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் லோகாம்பாள் கடந்த 4 மாதங்களாக வயிற்று வலியால் அவதி அடைந்து வந்தார். இதற்காக, அவர் சிகிச்சை மேற்கொண்டும், வலி குணமாக வில்லை. இதனால் மனம் உடைந்த அவர் கடந்த 26-ந்தேதி வீட்டு அருகே, அரளி விதையை அரைத்து குடித்து மயங்கி கிடந்தார்.
இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் லோகாம்பாள் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து வாங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கரூர் அருகே உள்ள சிவியம்பாளையத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 52). இவரது மகள் லோகாம்பாள் (24). இவர், திருக்காம்புலியூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் லோகாம்பாள் கடந்த 4 மாதங்களாக வயிற்று வலியால் அவதி அடைந்து வந்தார். இதற்காக, அவர் சிகிச்சை மேற்கொண்டும், வலி குணமாக வில்லை. இதனால் மனம் உடைந்த அவர் கடந்த 26-ந்தேதி வீட்டு அருகே, அரளி விதையை அரைத்து குடித்து மயங்கி கிடந்தார்.
இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் லோகாம்பாள் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து வாங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X