என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாயல்குடி அருகே நெற்கதிர் அறுக்கும் எந்திரத்தில் சிக்கி வாலிபர் படுகாயம்
Byமாலை மலர்29 Jan 2020 5:13 PM GMT (Updated: 29 Jan 2020 5:13 PM GMT)
சாயல்குடி அருகே நெற்கதிர் அறுக்கும் எந்திரத்தில் சிக்கி வாலிபர் படுகாயமடைந்தார்.
சாயல்குடி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சில்ஓடைபாலன்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கபிவேல் மகன் தங்கமணி (வயது 20). இவர் அதே கிராமத்தை சேர்ந்த பிச்சை மகன் அபேல் என்பவர் சொந்தமாக வைத்திருக்கும், கதிர் அறுக்கும் எந்திரத்தில் வேலை செய்து வருகிறார். இந்த எந்திரத்தில் வேலைக்கு சேர்ந்ததும், பல்வேறு ஊர்களுக்கு சென்று நெல் அறுவடை பணியில் ஈடுபட்டு வந்தார்.
இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது அறுவடை பணி மும்முரமாக நடந்து வருவதால், தங்கமணி இந்த பணியில் ஈடுபட்டு வந்தார். இதையடுத்து வாலிநோக்கம் பகுதியில் அறுவடை நடைபெற்று வருவதால் அந்த பகுதிக்கு எந்திரத்துடன் சென்று நெல் அறுவடை பணியில் ஈடுபட்டார்.
இந்தநிலையில் நேற்று சேரந்தை கிராமத்தை சேர்ந்த முத்திருளாண்டி என்பவருக்கு சொந்தமான வயலில் அறுவடை பணி நடைபெற்று கொண்டிருந்தபோது தங்கமணியின் வலது கால் எதிர்பாராதவிதமாக நெல் அறுவடை செய்யும் எந்திரத்தில் சிக்கியது. இந்த கொடுமையான விபத்தில் அவரது கால் சிதைந்து சின்னாபின்னமாகியது. அதில் வேதனையால் தங்கமணி துடிதுடித்தார்.
இதுகுறித்து தகவலறிந்த வாலிநோக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரை மீட்டு ஆம்புலன்சு மூலம் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வாலிநோக்கம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X