search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மொபட் மாயம்
    X
    மொபட் மாயம்

    காவேரிப்பட்டணம் அருகே வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மொபட் மாயம்

    காவேரிப்பட்டணம் அருகே வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த ரூ. 15 ஆயிரம் மதிப்பிலான மொபட் காணாமல் போனது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள மோட்டுகொல்லக் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கணேசன்(52). விவசாயி.

    இவர் தனக்கு சொந்தமான ரூ.15 ஆயிரம் மதிப்பிலான மொபட்டை கடந்த 27-ம் தேதி மாலை தனது வீட்னின் முன்பு நிறுத்தியுள்ளார். பின்னர் நேற்று காலை எழுத்து பார்த்தபோது, மொபட்டை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. 

    இது குறித்து கணேசன் காவேரிப்பட்டணம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர். கண்ணன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×