என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பாவூர்சத்திரம் அருகே பெண்ணை கொல்ல முயன்ற வாலிபர் கைது
நெல்லை:
பாவூர்சத்திரம் அருகே உள்ள மேலசிவஞானபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு கிருஷ்ணவேனி (வயது 34) என்ற மனைவியும், தக்ஷா என்ற மகளும், கோபிகிருஷ்ணன் என்ற மகனும் உள்ளனர். மணிகண்டன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கிருஷ்ணவேனி தனது குழந்கைளுடன் தனியாக மேலசிவஞானபுரத்தில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு பாவூர்சத்திரம் அருகே உள்ள குலசேகரபட்டியை சேர்ந்த முருகையா மகன் பிரேம்குமார்(25), கிருஷ்ணவேனியின் வீட்டிற்கு வந்தார். அங்கு தனியாக இருந்த கிருஷ்ணவேனியை அவர் கொலை செய்ய முயன்றுள்ளார். உடனே கிருஷ்ணவேனி கத்தி கூச்சலிட்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து சென்றனர்.
இதை பார்த்த பிரேம்குமார் அங்கிருந்து தப்பியோடினார். உடனே கிருஷ்ணவேனி பாவூர்சத்திரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் பிரேம்குமார் மீது கொலை முயற்சி வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர். விசாரணையில் கிருஷ்ணவேனியின் அக்காள் மகன் தனது மோட்டார் சைக்கிளில் பிரேம்குமாரின் உறவினர் மகனை கூட்டி சென்றுள்ளார்.
அப்போது பிரேம்குமார் உறவினரின் மகன் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து இறந்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த பிரேம்குமார் கிருஷ்ணவேனி குடும்பத்தினர் மீது கோபத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணவேனி தனியாக இருப்பதை அறிந்த பிரேம்குமார் நேற்று அவரை கொலை செய்ய முயன்றுள்ளார் என்பது தெரிய வந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்