search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கோவையில் வாலிபர் உள்பட 4 பேர் தற்கொலை

    கோவையில் வெவ்வேறு சம்பவத்தில் வாலிபர் உள்பட 4 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை சின்ன தடாகம் வரபாளையத்தைச் சேர்ந்தவர் கோகுல் (வயது 20) தொழிலாளி. சம்பவத்தன்று இவர் கொண்டையம் பாளையம் தொகுதியில் சாணி பவுடர் குடித்து மயங்கி கிடந்தார்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுமதித்தார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்...

    கோவை சூலூர் கள்ளப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (49). இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் வேலை கிடைக்காமல் இருந்து வந்தார். சம்பவத்தன்று நாகராஜ் தனது குடிப்பழக்கத்தை நினைத்து மனவேதனை அடைந்தார்.

    இதனால் விரக்தி அடைந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை ஆனைமலை செம்மேடு பகுதியை சேர்ந்தவர் வீரன் (55). கூலித்தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். அதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை.

    இதனால் மனவேதனை அடைந்த வீரன் சம்பவத்தன்று வீட்டில் சாணி பவுடர் குடித்து மயங்கி விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர். அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ஆனைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பேரூர் சுண்டக்காமுத்தூர் ராமசெட்டி பாளையத்தை சேர்ந்தவர் சோலையம்மாள் (80). இவர் உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். அதற்காக சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை.

    இதனால் விரக்தியடைந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சாணி பவுடர் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பேரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×