என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊத்துக்கோட்டை அருகே கட்டிடத்துக்கு வர்ணம் பூசிய பெயிண்டர் கீழே விழுந்து பலி
Byமாலை மலர்29 Jan 2020 6:24 AM GMT (Updated: 29 Jan 2020 6:24 AM GMT)
ஊத்துக்கோட்டை அருகே கட்டிடத்துக்கு வர்ணம் பூசிய பெயிண்டர் கீழே விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்துக்கோட்டை:
சென்னை புளியந்தோப்பு ஆசிர்வாதபுரம் 2வது தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (28). பெயிண்டர். இவருக்கு சுசித்ரா (26) என்ற மனைவியும், தேஜஸ்வரன் (3) என்ற மகனும் உள்ளனர். கார்த்திக் நேற்று ஊத்துக்கோட்டை அருகே உள்ள நெல்வாயில் உள்ள தனியார் கட்டிடத்துக்கு சாரம் கட்டி வர்ணம் பூசிக் கொண்டிருந்தார்.
அப்போது கால் தடுமாறியதால் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனே அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பென்னாலூர் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X