என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்தில் 2 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல்- நன்றி தெரிவித்தார் முதல்வர்
Byமாலை மலர்28 Jan 2020 4:47 PM GMT (Updated: 28 Jan 2020 4:47 PM GMT)
தமிழகத்தில் அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இரண்டு புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை:
தமிழகத்தில் கடந்த ஆண்டு 9 புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்து, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன்பின்னர் அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் புதியதாக மருத்துவ கல்லூரிகள் அமைப்பது தொடர்பாக மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டிருருப்பதாக சமீபத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கூறியிருந்தார்.
இந்நிலையில் அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் புதியதாக மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று 2 மருத்துவ கல்லூரிகள் அமைக்க ஒப்புதல் அளித்து உள்ளது. ரூ.650 கோடியில் மத்திய , மாநில அரசுகளின் நிதி பங்களிப்பில் இந்த கல்லூரிகள் அமைக்கப்படுகின்றன.
மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்ததற்காக மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X