search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்வர் பழனிசாமி
    X
    முதல்வர் பழனிசாமி

    தமிழகத்தில் 2 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல்- நன்றி தெரிவித்தார் முதல்வர்

    தமிழகத்தில் அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இரண்டு புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் கடந்த ஆண்டு 9 புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்து, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 

    அதன்பின்னர் அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் புதியதாக மருத்துவ கல்லூரிகள் அமைப்பது தொடர்பாக மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டிருருப்பதாக சமீபத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கூறியிருந்தார்.

    இந்நிலையில் அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் புதியதாக மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று 2 மருத்துவ கல்லூரிகள் அமைக்க ஒப்புதல் அளித்து உள்ளது. ரூ.650 கோடியில் மத்திய , மாநில அரசுகளின் நிதி பங்களிப்பில் இந்த கல்லூரிகள் அமைக்கப்படுகின்றன.

    மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்ததற்காக மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×