என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உப்பிலியபுரம் அருகே சாலை விபத்தில் ஒருவர் பலி
Byமாலை மலர்28 Jan 2020 3:00 PM GMT (Updated: 28 Jan 2020 3:00 PM GMT)
உப்பிலியபுரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உப்பிலியபுரம்:
உப்பிலியபுரத்தை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் பெருமாள். தனது உறவினர் வீட்டு விசேஷத்திற்காக குடும்பத்துடன் தனது காரில் சென்று விட்டு வீடு திரும்பினார். காரை நாகநல்லூரை சேர்ந்த சரவணன் ஓட்டி வந்தார். அப்போது கார் கிருஷ்ணாபுரம் அருகே வந்த போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
கார் தனது கட்டுபாட்டை இழந்து ரோட்டில் உள்ள மரத்தில் மோதியது. இதில் காரில் பயணம் செய்தவர்கள் பலத்த காயம் அடைந்தனர். இது குறித்து உப்பிலியபுரம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர் ஒக்கரையை சேர்ந்த சுகர்ன பாபு (வயது 45) என்பது தெரியவந்தது. இவருக்கு திருமணமாகி மனைவியும் , ஒரு மகன், மகளும் உள்ளனர். விபத்து குறித்து உப்பிலியபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X